என் மானசீக குரு ஜாக்கிசானிடம் கற்றுக்கொள்ளுங்கள்




சரியாக 18 வருடங்களுக்கு முன் நான் ஆட்டோ ஓட்டியிருக்கிறேன் , மெரினா பீச்சில் டீ விற்று இருக்கிறேன் , அப்போது வாழ்க்கை பற்றிய பயம் அதிகம் இருந்தது. அந்த கஷ்டங்களி்ன் போது சொல்லிதர எவரும் எனக்கு இல்லாதபோது, armor of god படம் வெளியானது ,என் வாழ்வின் சோக பக்கங்களுக்கு அந்த படமே பெரிய ஆறுதல் , உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் . அந்த நடிகனின் சிரிப்பு என்னை கவர்ந்தது , இயல்பான குறும்பு , 3 குத்து வாங்கி உதடு கிழிந்து வீரம் வரும் தமிழ் ஹீரோக்களுக்கு மத்தியில் நன்றாக உதை வாங்கி திருப்பி அடிக்கும் போது , என்னை சுழற்றி அடிக்கும் வாழ்வை நானே திருப்பி அடிபபது போல் இருந்தது என்பேன் . முக்கியமாக தான் எந்த அளவுக்கு ரத்தம் சிந்தி உழைத்தோம் என்பதை படத்தின் கடைசி டைட்டிலில் பகிர்ந்து கொன்ட நேர்த்தி என்னை மிகவும் கவர்ந்தது . அதன் பிறகு 5வருடங்களுக்கு முன்பு வரை அவரின் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் முதல் காட்சீயில் நான் இருந்தேன் , தான் எது செய்தாலும் தம் ரசிகர் அதனை பின் பற்றுவார்கள் என்பதால் TWIN BROTHER படத்தை தவிர எந்த படத்திலும் ஜாக்கி சிகரேட் பிடிப்பது போல் எந்த படத்திலும் காட்சி வைத்ததில்லை , தாசவதாரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கூட எவ்வளவு அடக்கமாக உட்கார்ந்து இருந்தார் பாருங்கள் அதுதான் ஜாக்கி. அவர் ஹாலிவுட்டின் உச்ச நடிகர், கேசட் வெளியிட்டதும் அந்த ரிப்பன் கிழே கிடக்க அதனை எடுத்து குப்பையில் போட அலைந்தார் பாருங்கள் , அந்த பொறுப்பை தமிழ் நடிகர்கள் கற்று கொள்ள வேண்டும் .50 வயதுக்கு மேல் அதே சுறுசுறுப்பு , அதே புன்னகை. விழாவில் எவரைபற்றி பேசினாலும் அதற்க்கு புன்னகை செய்து கைதட்டி அவர்களின் பாராட்டுக்களை தலை குனிந்து ஏற்றுக்கொண்டது , நம் நடிகர்களை எவர்பாராட்டினாலும் , எந்த ரியாக் ஷனும் இல்லாமல் , யார் வீட்டு இழவோ பாய போட்டு அழுவோ , என உட்கார்ந்து இருந்தது என்னை போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது . என் மாணவர்கள் என்பதால் என்னால் செய்ய முடியாத எதையும் என் மாணவர்களை நான் செய்ய சொன்னது இல்லை என்ற அவரின் தலமை பண்பை அவரிடம் இருந்து கற்று கொள்ளுங்குகள் . குறிப்பு 84 வயதிலும் ஜாக்கி பற்றிய சிறு வயது மற்றும் வாழக்கை குறிப்புகளை பேசி தான் எந்த செயல் செய்தாலும் முழு இடுபாட்டுடன் செய்வேன் என்று நிருபித்த தமிழினத் தலைவருக்கு என் நன்றிகள்• இவ்வளவு பேசிய நீங்கள் உங்கள் மானசீக குரு கலந்து கொண்ட விழாவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள வில்லை என்று கேட்கின்றீர்களா? எ/கா ஆக திருமணம் ஆனதும் 24 மணி நேரமும் மனைவியுடன் இருக்க வேண்டும் ஏன்று எண்ணுவோம் , 90 நாட்கள் கழித்து கை மேலே படும் போது கச கசன்னு இருக்குது கையை கொஞ்சம் டுக்கிறியா என்போமே , அதுபோல்தான். ஆனால் ,அன்பு மட்டும் மாறாத ஒன்று . அன்புடன் ... ஜாக்கி சேகர்

2 comments:

  1. நல்ல மொழிபெயர்ப்பாளர் மட்டும் இருந்திருந்தால் தலைவர் அள்ளி வீசிய புள்ளி விவரங்களைக் கண்டு ஜாக்கி மிரண்டிருப்பார்.

    எந்தச் செயலிலும் முழுமையான ஈடுபாடு.அதுதான் தலைவர் கலைஞர்.

    ஒரு குழந்தையைப் போன்று உற்சாகமும்,குதுகலமுமாயிருந்த ஜாக்கியைப் பார்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner